News July 25, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 3065 மனுக்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் 4ம் கட்டமாக ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அரியலூர் ஒன்றியத்தில் சுண்டக்குடி ஊராட்சியில் மற்றும் திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் ஊராட்சியில் நடைபெற்றது. சுண்டக்குடி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியருடன், எம்எல்ஏ சின்னப்பா கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இன்று இந்த இரண்டு ஊராட்சிகளிலும் 3065 மனுக்கள் பெறப்பட்டுள்ளது

Similar News

News August 20, 2025

அரியலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<17460375>>(பாகம்-2)<<>>

News August 20, 2025

அரியலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

அரியலூர்: கொள்ளிடம் நீர்வரத்து அதிகரிப்பு-ஆட்சியர் எச்சரிக்கை!

image

மேட்டூர் அணைக்கு கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணையிலிருந்து முறையே வினாடிக்கு 70,000 கன அடி மற்றும் 25,000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!