News March 30, 2024

மக்களுடன் செல்பி எடுத்த ஆட்சியர்

image

கோவை புரூக் பீல்டு வர்த்தக வளாகத்தில் இன்று (மார்ச்.30) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி மகளிர்கள் 100க்கும் மேற்பட்ட கோலம் வரையப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு மகளிர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

Similar News

News February 17, 2026

உக்கடம் அருகே விபத்து: இளைஞர் பலி

image

நெல்லையைச் சேர்ந்த மாடசாமி(25) கோவை-உக்கடத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று விட்டு தனது பைக்கில் வீடு திரும்பும் போது உக்கடம் பேருந்து நிலையம் அருகே விபத்தில் சிக்கினார். பின், கோவை ஜிஹெச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 17, 2026

மதுக்கரை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு

image

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பிரிவு மொடமாத்தி சுற்று பகுதியில் இன்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா விவசாய நிலத்தில் முள் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 17, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!