News October 13, 2025
மக்களுக்காக உருவாகும் பாஜக தேர்தல் அறிக்கை: நயினார்

திமுக மக்களின் நன்மையை பார்க்காமல், பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆட்சி செய்வதாக நயினார் விமர்சித்துள்ளார். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை குறித்து சுற்றுப்பயணத்தின்போது மக்களிடம் எடுத்துரைப்பேன் என்றும் ஒவ்வொரு கிராமாக சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டறிய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் கூறினார்.
Similar News
News October 13, 2025
BREAKING: விஜய்க்கு முதல் வெற்றி

SC உத்தரவை அடுத்து, கரூர் விவகார வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. TN அரசின் கீழ் செயல்படும் அதிகாரிகள் கரூர் விவகாரத்தை விசாரிக்கக்கூடாது என TVK கோரிக்கை விடுத்ததுபோல் இத்தீர்ப்பு வந்துள்ளது. இது, விஜய் தரப்புக்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
News October 13, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று SC தீர்ப்பளித்துள்ளது. கரூர் வழக்கை விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் SIT குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி

ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை பற்றிய ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. கட்சியின் முக்கியமான தலைவராக இருக்கும் தாங்கள், இக்கருத்தை தவிர்த்திருக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை இந்திராகாந்தி நடத்தியது தவறு என்றும், அதனால்தான் அவரது உயிர் போய்விட்டது எனவும் ப.சிதம்பரம் நேற்று பேசியிருந்தார்.