News March 25, 2024
மகா சண்டியாகத்தில் பங்கேற்ற அமைச்சர்

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள அன்னை ஓம் பவதாரணி, ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில், மகா சண்டி யாகம் முதல் நாள் விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
Similar News
News August 13, 2025
விழுப்புரத்தில் தரமற்ற குடிநீர் – 16 நிறுவனங்கள் மீது வழக்கு

விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை சார்பில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஆக.13) நடைபெற்றது. இந்நிலையில் குடிநீர் பாட்டில் உற்பத்தி மற்றும் தண்ணீரின் தரம் குறித்து எடுத்துரைத்ததோடு தரமற்ற தண்ணீர் பாட்டில் தயாரித்த 16 நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
News August 13, 2025
விழுப்புரம்: Certificate தொலைஞ்சிருச்சா.. கவலை வேண்டாம்!

விழுப்புரம் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News August 13, 2025
BREAKING: விழுப்புரம் பள்ளியில் உயிரிழந்த மாணவன்

விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை (ஆக.13) 11ஆம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காலை பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட மாணவர் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.மாணவன் உயிரிழப்பு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,காவல்துறையினர் பள்ளியில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது