News March 29, 2025

மகாத்மா ரயிலை நிறுத்திய சின்னாளப்பட்டி மக்கள்!

image

திண்டுக்கல்: பிப்.2 1946ஆம் ஆண்டு. அப்போது மகாத்மா காந்தி தனது கடைசி தென் இந்திய பயணத்தில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்லா ஊர் ஸ்டேஷனிலும் காந்தியடிகளின் ரயில் நிற்காது. அதனால், மகாத்மாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் இருந்த சின்னாளப்பட்டி மக்கள் ரயில்வே சிக்னலை மாற்றி அமைத்து மகாத்மா ரயிலை தங்கள் ஊரில் நிறுத்தச் செய்தனர்.

Similar News

News November 4, 2025

திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம் பெறுகின்றன. சமூக ஊடக அட்டைகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன் வெளியிட்டார். தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களிடம் புதுப்பிப்பு, பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம் போன்ற பணிகளில் முழு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

News November 3, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News November 3, 2025

திண்டுக்கலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக தளங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. முன் செல்லும் வாகனத்துக்கு குறைந்தது 10 மீட்டர் இடைவெளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நினைவூட்டப்பட்டனர். பாதுகாப்பு இடைவெளி உயிரைக் காப்பதாகும் என்பதால், ஊரகப் பகுதிகள் முதல் நகரப்பகுதிகள் வரை மக்கள் விதிகளை விழிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று சமூக பயனாளர்கள் வலியுறுத்தினர்.

error: Content is protected !!