News May 16, 2024

மகளை எரிக்க முயன்ற பெற்றோர் உட்பட 6 பேர் கைது

image

மதுரை அருகே ஆதனூரைச் சேர்ந்தவர் தமிழ். இவரது மகள் வைகைச் செல்வி(24) வயிற்று வலி காரணமாக அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை போலீசுக்கு மறைத்து இன்று சல்வார்பட்டி சுடுகாட்டிற்கு எரிப்பதற்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த ஆதனூர் விஏஓ சிவலிங்கம் போலீசில் புகார் செய்தார். அலங்காநல்லூர் போலீசார் பெற்றோர் உட்பட 6 பேரை இன்று கைது செய்தனர்.

Similar News

News July 9, 2025

2 விரைவு ரயில்களின் பயண நேரம் மாற்றம்

image

மதுரை பிரிவில் பொறியியல் பணிகளுக்காக ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ரயில் எண் 07192 (மதுரை – கச்சிகுடா) ஜூலை 9 அன்று இரவு 10:40 பதிலாக 12 மணிக்கு (80 நிமிடங்கள் தாமதம்) புறப்படும். ரயில் எண் 07696 (ராமேஸ்வரம் – சார்லப்பள்ளி) ஜூலை 11 அன்று மாலை 9:10 பதிலாக இரவு 19:00 மணிக்கு (9 மணி நேரம் தாமதம்) புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

News July 9, 2025

மதுரையில் ஜான் பாண்டியன் சுற்றுப்பயணம்

image

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான ஜான்பாண்டியன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் மதுரை புறநகர் கே.புதுப்பட்டி பகுதியில் நேற்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

News July 8, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (08.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!