News December 29, 2025

மகளிர் மாநாட்டால் சங்கி கூட்டத்துக்கு தூக்கம் வராது: DCM

image

நிதி, கல்வி, மொழி என ஒவ்வொரு மாநில உரிமையாக மத்திய அரசு பறித்து வருவதாக DCM உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக மகளிர் மாநாட்டில் பேசிய அவர், சுயமரியாதை கொண்ட மகளிர் உள்ளவரை சங்கி கூட்டத்தால் தமிழ்நாட்டை நெருங்க முடியாது எனவும் சாடியுள்ளார். இந்த மாநாட்டை பார்த்து அடுத்த 10 நாள்களுக்கு சங்கி மற்றும் அடிமை கூட்டத்துக்கு தூக்கம் வராது என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News January 9, 2026

BREAKING: யாருடன் கூட்டணி.. முடிவை சொன்ன பிரேமலதா

image

யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுத்துவிட்டேன் என்று கடலூர் மாநாட்டில் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுவரை எந்த கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை. அப்படி இருக்கையில், தேமுதிக மட்டும் கூட்டணி அறிவிப்பை இன்றே வெளியிட வேண்டுமா என தொண்டர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பலரும், வேண்டாம்! வேண்டாம் ! என முழக்கம் எழுப்பினர். உடனே, கூட்டணி குறித்து பின்னர் அறிவிப்பதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

News January 9, 2026

காணாமல் போன போன், அடுத்து நடந்ததை பாருங்க!

image

மொபைல் போனை தொலைத்துவிட்டால், அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம் என்றுதான் நினைப்போம். அப்படித்தான், பெங்களூருவில் போனை தொலைத்துவிட்ட கல்லூரி மாணவி ஒருவர், எதற்கும் இருக்கட்டுமே என்று போலீஸின் ‘112’ நம்பருக்கு போன் செய்து புகாரளித்தார். அட, என்ன ஆச்சரியம்! 8 நிமிடத்தில் அங்குவந்த போலீஸ், GPS உதவியுடன் உடனே போனை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர். ஆகவே, போன் தொலைந்தால் புகார் அளிக்க தயங்காதீர்.

News January 9, 2026

கனமழை: 14 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

image

நாளை சனிக்கிழமை என்றாலும், பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இயங்கும். இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் நாளை மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழையும் பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், மாணவர்கள் குடை, ரெயின் கோட்டை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.

error: Content is protected !!