News September 10, 2024
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.54 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருநெல்வேலி மாவட்டம் பாலை நேருஜி கலையரங்கத்தில் வைத்து தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.54.28 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ, மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 30, 2025
நெல்லை: உங்கள் புகார்களை இதில் கூறலாம்!

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குப்பைகள் தேக்கம், பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை ஏற்கனவே நடைமுறையில் உள்ள 94899 30261 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம். அல்லது 1800 425 4656 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். *நெல்லையை தூய்மையாக்க அனைவரும் ஷேர் செய்யுங்கள்
News August 30, 2025
பல்கலை வகுப்புகள் செப்.1 முதல் துவக்கம்; துணை வேந்தர் தகவல்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் மோதல் விவகாரத்தால் நேற்று முதல் பல்கலைக்கழகத்திற்கு கால வரையற்ற விடுமுறை வகுப்புகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்.1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பல்கலைக்கழகம் வழக்கமாக செயல்படும் என துணைவேந்தர் சந்திரசேகர் இன்று அறிவித்துள்ளார்.
News August 30, 2025
மாவட்ட சுகாதார அலுவலர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலராக டாக்டர் கீதாராணி பணி செய்து வந்த நிலையில் அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடத்திற்கு பொறுப்பு சுகாதார அலுவலராக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதிய சுகாதார அலுவலராக விஜயசங்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.அவர் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சுகாதார அலுவலருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.