News March 2, 2026

மகளிருக்கு ₹1000.. ஏன் சிலருக்கு பொத்துட்டு வருது? ரோஜா

image

CM ஸ்டாலின் மகளிருக்கு ₹5000-ஐ கொடுத்ததால் பலருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என ரோஜா கூறியுள்ளார். அதனால்தான் அதை சிலர் ’பிச்சை காசு, மக்களை சோம்பேறி ஆக்குகிறார் CM’ என விமர்சிப்பதாக கூறிய அவர், ஸ்டாலின் அப்படி செய்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றார். மேலும், மிடில் கிளாஸ் மக்களுக்கு ₹1000 பெரிய விஷயம் எனவும், ஏழைகளுக்கு கொடுத்தால் மட்டும் ஏன் இப்படி பொத்துக்கொண்டு வருகிறது என்றும் கேட்டுள்ளார்.

Similar News

News March 2, 2026

+2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 2, 2026

தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்?

image

பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள். வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

News March 2, 2026

பங்குச்சந்தை வீழ்ச்சி.. ₹8 லட்சம் கோடி இழப்பு!

image

இஸ்ரேல்- US- ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 1,498 புள்ளிகளும், நிப்டி 455 புள்ளிகளும் வீழ்ந்தன. முதலீட்டு மதிப்பில் சுமார் ₹8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. எண்ணெய் நிறுவனப் பங்குகள் 6% வரை சரிந்துள்ளன. ஆனால், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!