News December 16, 2025
ப.வேலூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடைகளில் லாட்டரி விற்பனை செய்வதாக போலீஸ்காரருக்கு தகவல் கிடைத்தது இதன் பெரிய டிஎஸ்பி சங்கீதா உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் டீக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கண்ணன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை..!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 16, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.16) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (நல்லதம்பி – 9498168985) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 16, 2025
திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுமையால் விபரீதம்!

திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்து (26) என்பவர், ரூ.3 ஆயிரம் கந்து வட்டிக்கு வாங்கிய நிலையில், அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. வட்டியுடன் பணம் செலுத்திய பின்னரும் அசல் மற்றும் அபராத வட்டி கேட்டு நேற்று இரும்புக் கம்பியால் தாக்கியதில் முத்து ரத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


