News January 23, 2025

போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவர்களிடம் விசாரணை

image

கம்பம் வடக்குபட்டி பகுதியில் நேற்றிரவு 8 மணிக்கு 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் கொண்ட கும்பல் வீடுகளில் புகுந்து கஞ்சா சோதனை நடத்துவது போல் நடித்து நாங்கள் என்.ஐ.பி.போலீஸ் எனக் கூறி பணம் பறித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் வடக்கு போலீசார் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரித்ததில் சின்னமனூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Similar News

News December 27, 2025

தேனிக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்!

image

பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (டிச.26) அதிகாலை குற்ற தடுப்பு சம்பந்தமாக போடி விலக்கு அருகே ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த முருகன் (45) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News December 27, 2025

தேனி: ரேஷன் கார்ட் இருக்கா… கலெக்டர் முக்கிய அறிவிப்பு…

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார். ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

News December 27, 2025

தேனியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்!

image

வடுகபட்டி பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (27). இவர் சுரேஷ் என்பவரது காய்கறி கடையில் காய் வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விருமாண்டி, இவரது நண்பர் பாண்டி செல்வம் ஆகியோர் மகாலட்சுமி வாங்கிய காய்கறிகளை எடுத்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமிக்கு கேட்டதற்கு அவரை அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தென்கரை போலீசார் விருமாண்டி, பாண்டிசெல்வத்தை கைது (டிச.26) செய்தனர்.

error: Content is protected !!