News April 17, 2025
போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில், போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த பைக்கை சோதனை செய்ய போலீசார் மறித்தனா். பைக்கை விட்டு இறங்கி வந்த இளைஞா், போலீசாரை தகாத வாா்த்தை பேசியதோடு, பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.
Similar News
News August 24, 2025
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாயை சேர்ந்த 80 வயது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்த வட மாநில வாலிபர்கள் மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயன்றனர். இந்த நிலையில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் வரும் சத்தத்தை கேட்டு வட மாநில வாலிபர்கள் தப்பி ஓடியுள்ளார்.
News August 23, 2025
திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
ஆவடியில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

ஆவடியில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.