News November 8, 2025

போலி வாக்காளர்களை சேர்த்த திமுக அரசு: தமிழிசை

image

1947-ல் இருந்து 8 முறை நடந்த SIR பணிகளை எதிர்க்காத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது PM மோடியின் ஆட்சியில் மட்டும் எதிர்ப்பது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். SIR பணிகள் மூலம் 2 ஆண்டுகளாக திமுக அரசு சேர்த்த போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும், அந்த அச்சத்தில் தான் அவர்கள் எதிர்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். SIR-க்கு எதிராக போராடுவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News

News November 8, 2025

தமிழை வைத்து தமிழர்களை சுரண்டும் திமுக: நயினார்

image

தேர்தல் வாக்குறுதிபடி காளை வளர்ப்போருக்கு மாதம் ₹1,000 ஊக்கத்தொகையை திமுக வழங்காதது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழை வைத்து தமிழர்களைச் சுரண்டி திமுக ஆட்சியை பிடித்ததாக சாடியுள்ள அவர், CM ஸ்டாலினின் அரசு மாடுபிடி வீரர்களுக்கான பரிசுத் தொகையை நிறுத்திவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, திமுக அரசு இன்றுவரை வாய்திறக்க மறுப்பதாகவும் நயினார் தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

சார்லி சாப்ளின் பொன்மொழிகள்!

image

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை. *இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும். *நாம் அனைவரும் நம்மை நாமே இழிவாக நினைக்கின்றோம். அதுதான் இந்த உலகின் பிரச்சனை. *ஆசைப்படுவதை மறந்துவிடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.

News November 8, 2025

கோவை மாணவி மீது பழிசுமத்த கூடாது: கனிமொழி

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கனிமொழி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், அப்பெண் மீது பழிசுமத்துவதை சமூகம் நிறுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவியின் மீது பழிசுமத்தும் விதமாக திமுக கூட்டணியில் உள்ள கொங்கு ஈஸ்வரன் MLA பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!