News October 24, 2024
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 4 பேர் கைது

பட்டுக்கோட்டை சேர்ந்த பக்கிரி சாமி, தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகரன், பாண்டி, மதுரை மேலூரை சேர்ந்தவர் மகேஷ், ஆகியோர் வெவ்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்கள். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் போலி ஆவணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்து ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
Similar News
News December 2, 2025
திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருச்சியில் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க சாலை மற்றும் பொதுவெளி தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டமோ அல்லது சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடைபெறுவதாக தெரிந்தால் உடனடியாக மாவட்ட காவல் அலுவலக உதவிஎண் 8939146100 (அ) அவசர உதவி எண் 100க்கு தகவல் தெரிவிக்க திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News December 2, 2025
திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

திருச்சி மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
திருச்சி: மழைநீரில் பயணிகளுடன் சிக்கிய ஆம்னி வேன்

அரியமங்கலம் மேம்பாலத்தின்கீழ் உள்ள பாதையில் 4 நாட்களாக தேங்கி மழைநீர் மாநகராட்சியின் நிர்வாகத்தால் வெளியேற்றபடாததால், பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன் பள்ளத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பித்தனர். அதேநேரம் தண்ணீரை வெளியேற்ற திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


