News November 14, 2024

போலி ஆவணம் – கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

புதுச்சேரி அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்டாக் எம்பிபிஎஸ், சேர்க்கை என்ஆர்ஐ ஒதுக்கீடு இடங்களுக்கு போலி ஆவணம் சமர்ப்பித்த 49 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். என்ஆர்ஐ, ஒதுக்கீடு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Similar News

News September 13, 2025

புதுச்சேரி: உரிமம் பெறாத விடுதிகளுக்கு சீல்

image

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உரிமம் பெற்று புதுப்பிக்கப்படாமல் உள்ள தங்கும் விடுதிகள், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களுடைய உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிமத்தை புதுப்பிக்காத தங்கும் விடுதி, வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 13, 2025

ஃபாஸ்ட் ஃபுட் உணவை தவிர்க்க வேண்டும்-ஆளுநர்

image

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,
“தவறான உணவு பழக்க வழக்கம் அதிகமான சர்க்கரை, உப்பு, எண்ணெய்களால் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் புட் உணவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இது தவிர்க்கப்பட வேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.

News September 13, 2025

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் புதுச்சேரி தலைமைத் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் அரியாங்குப்பம் மற்றும் மனவேலி தொகுதி சட்டமன்றத் தொகுதியின் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் சார்பில் கலந்து கொண்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை வழங்கப்பட்டது .

error: Content is protected !!