News March 1, 2026

போர் பதற்றம்… பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வேண்டுகோள்

image

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து தரப்பும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் போர் சூழலில் சிக்கியுள்ள இந்தியர்கள் தூதரகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News March 8, 2026

நாட்டின் பெண் சக்திகள்: PM மோடி மகளிர் தின வாழ்த்து!

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பெண் சக்திகளுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் உறுதி, திறமை மற்றும் படைப்பாற்றலால், நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களின் சாதனைகள் நாட்டை ஊக்குவிப்பதுடன் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதிலும் பங்களிப்பதாக பாராட்டியுள்ளார்.

News March 8, 2026

BREAKING: வரும் 12-ம் தேதி தவெக போராட்டம்

image

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய், அரசியல் ரீதியாக அடுத்தடுத்த நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி வரும் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட, மா.செ.க்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் விஜய், ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 8, 2026

FLASH: சேலத்தில் EPS முக்கிய ஆலோசனை!

image

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இழுபறியில் உள்ள நிலையில், மூத்த நிர்வாகிகளுடன் EPS ஆலோசனை நடத்தினார். சேலத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் KC வீரமணி, செல்லூர் ராஜு, MR விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட EX அமைச்சர்கள் 7 பேர் பங்கேற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து OPS ஆதரவாளராக இருந்த செல்லமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

error: Content is protected !!