News March 5, 2026
போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டது: ராகுல்

இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல் வீழ்த்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டதாக கூறிய அவர், PM மோடி இதைபற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என விமர்சித்துள்ளார். மேலும், இதுபோன்ற ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை எனவும், ஆனால் USA-விடம் நாட்டையே விட்டுக்கொடுத்த ஒரு பிரதமரை இந்தியா தற்போது கொண்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News April 5, 2026
விஜய் அரசியலை தாக்கிய சீமான்

திருச்சி பிரசாரத்தில் விஜய் பேசியதை சீமான் கடுமையாக சாடியுள்ளார். எனக்காகவும், உங்களுக்காகவும் நியாயம் கேட்டு வந்துள்ளேன் என விஜய் பிரசாரத்தின்போது பேசியிருந்தார். இந்நிலையில், சொந்த வலி என்பது மக்களுடைய வலி கிடையாது என்றும் மக்கள் வலிக்கு தீர்வு காண்பவனே தலைவன் என்றும் சீமான் விமர்சித்தார். மேலும், தன்மீது 262 வழக்குகள் இருந்ததாகவும், அதற்காக ஏறாத நீதிமன்றமோ, போகாத சிறையோ இல்லை என்றார்.
News April 5, 2026
இந்தியா நோக்கி வரும் அடுத்த LPG கப்பல்

மேற்காசிய போர் பதற்றத்திற்கு இடையே இந்தியக் கொடியுடன் கூடிய ‘கிரீன் சான்வி’ என்ற எரிவாயு கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளது. சுமார் 46,650 மெட்ரிக் டன் LPG எரிவாயு உடன் வந்து கொண்டிருக்கும் இந்த கப்பல், இன்னும் சில நாள்களில் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்துள்ளன. இன்னும் 15 கப்பல்கள் வர உள்ளன.
News April 5, 2026
“ராகுல் பிரதமரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து”

புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, ராகுல் காந்தி பிரதமரானவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியாக 2026-ல் காங்கிரஸ் வந்தால், வீடுதேடி மாதந்தோறும் ₹2,500 மதிப்புள்ள மளிகை பொருள்கள், தாலிக்கு தங்கம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


