News April 29, 2024
போதை பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு

புதுவை திருக்கனுார், காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் கஞ்சா போதை பொருட்கள் தொடர்பான இளைஞர்கள் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. லிங்காரெட்டிப்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் முன்னிலை வகித்தனர்.
இதில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
Similar News
News August 16, 2025
வாஜ்பாய் நினைவு தினம் -கவர்னரும், முதல்வரும் மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் (மேரி கட்டிடம்) அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு இன்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
News August 16, 2025
புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி மின்திறல் குழுமத்தின் இயக்குநராக சோமசேகர் அப்பாராவ் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் புதுச்சேரி மின்திறல் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை புதுச்சேரி சார்பு செயலாளர் கந்தன் என்கிற சிவராஜன் பிறப்பித்துள்ளார்.
News August 16, 2025
இல.கணேசன் மறைவு-புதுச்சேரி முதல்வர் இரங்கல்

முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆளுநர் இல கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. தனது வாழ்வின் பெரும் பகுதியைத் தேச நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் எளிய மக்களின் நல்வாழ்விற்காகவும் அர்ப்பணித்தவர். அவரது மறைவு தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும்.” என கூறியுள்ளார்.