News February 17, 2025
“போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு” செயலி- ஆட்சியரகத்தில் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்த புகார்களை, போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு செயலில் பதிவு செய்யும் செயலாக்கம் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
அரியலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
அரியலூர்: பாமகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலின்படியும், பாமக இணை பொது செயலாளர் வழிகாட்டலின் படியும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து இந்த துண்டு பிரசுரங்களை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
News March 3, 2026
அரியலூர்: இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்!

அரியலூர் மாவட்டம், சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெய் காவல் புத்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது திடீரென கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர் பலத்த காயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


