News December 24, 2025

போதையில் வீட்டுப் படியில் தடுமாறி விழுந்த எலக்ட்ரீசியன் பலி

image

திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாண்டியராஜ்(32). எலக்ட்ரீசியனான இவர் மது போதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் முழு போதையில் வீட்டிற்கு வந்தவர் வீட்டுப் படி ஏறிய போது தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 30, 2025

மதுரை அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை

image

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகன் ஜோதி முருகன் 26. பொறியாளரான இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சோழவந்தான் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 30, 2025

மதுரை: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

மதுரை மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 30, 2025

மதுரை: கார் மோதி 2 பேர் துடிதுடித்து பலி

image

கொட்டாம்பட்டி, சொக்கம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை(47), இவரது சகோதரர் சுரேஷ்(40), பாபு(36) ஆகியோர் ஒரே டூவீலரில், நேற்று இரவு நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வலைச்சேரிபட்டி விலக்கு அருகே டூவீலர் சட்டென்று சாலையை கடக்க, அவர்கள் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அண்ணாதுரை, சுரேஷ் உயிரிழந்தனர். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து பற்றி கொட்டாம்பட்டி போலீஸ் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!