News January 30, 2026
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

(ஜன.30) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உதவி ஆணையர் ராஜி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.
Similar News
News February 2, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் த.தமிழ்வாணன் (40), தனியாா் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைப் பாா்த்து வந்தாா். அய்யூர், அகரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்புக் கட்டையில் மோதியதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 2, 2026
விழுப்புரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கடலூரைச் சேர்ந்தவர் ஜெசிப்பிரியா(22). இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தராஜ்(25) என்பவருக்கும் கல்லூரியில் காதல் மலர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.1) மாலை, ஜெசிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 1, 2026
விழுப்புரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, விழுப்புரம் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 944930680-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


