News February 18, 2025
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விளக்க கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்திவைத்துறை சார்பில், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” DRUG FREE IN செயலியின் (Mobile APT) பயன்பாடு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுடனான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
Similar News
News September 24, 2025
திண்டிவனம் அருகே சடலத்துடன் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியில் நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அவரது உடலுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலகியது. இதையடுத்து, காவல்துறையினர் வந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
News September 24, 2025
‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’

ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அக்டோபர் 4ம் தேதி ராமதாஸ் தொடங்குகிறார்.
News September 24, 2025
விழுப்புரம்: உங்களின் குடிநீர் சுத்தமானதா? CHECK பண்ணுங்க!

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். விழுப்புரத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்!