News December 14, 2025
போண்டி தீவிரவாத தாக்குதல்.. PM மோடி கண்டனம்

ஆஸ்திரேலியாவின், <<18561882>>போண்டி கடற்கரையில்<<>> நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்திற்கு X-ல் கடும் கண்டனம் தெரிவித்துள்ள PM மோடி, இந்த துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 2, 2026
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா..!

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பதால் தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 2, 2026
தொகுதி பங்கீடு இழுபறி.. அமித்ஷாவை சந்தித்த EPS

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகி பல நாள்கள் கடந்தும், இதுவரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து EPS உடன் பியூஷ் கோயல் மற்றும் நயினார் நாகேந்திரன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று டெல்லியில் அமித்ஷாவுடன் EPS ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
News March 2, 2026
சீமானுடன் இணைந்தார்.. முதல் ஆளாக ஆதரவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாதகவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்றது. அதில், தமிழ் தேசியத்தை காக்க நாதகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கிட பெரும் ஊக்கமாக அமைகிறது என சீமான் வரவேற்றுள்ளார்.


