News October 27, 2024

போடி: ஒரு ஏக்கர் கேரட்டுகளை தின்று தீர்த்த குரங்குகள்

image

போடி அருகே உள்ள மூணாறு இங்குள்ள வட்டவடை கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கொட்டாகொம்பூர் பகுதியில் ஏராளமான தமிழக விவசாயிகள் வசிக்கிறார்கள். இவர்கள் தங்களது தோட்டங்களில் கேரட், பீன்ஸ் முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை பயிரிட்டு வந்தனர். இதில் காட்டுப்பன்றி ஒரு பக்கம் பயிர்களை நாசம் செய்தன. மறுபக்கம் குரங்குகளின் கூட்டம் கூட்டமாக 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள கேரட்டுகளை தின்று நாசமாக்கின.

Similar News

News February 15, 2026

தேனி : இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

image

தேனி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.

Bharatgas: 77150 12345

HP: 94936 02222

Indane:84549 55555

இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 15, 2026

தேனி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சிறை

image

தேனியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (50). இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2024-ம் ஆண்டு தேனி மகளிா் காவல் நிலைய போலீசார் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீர்ப்பளித்தார்.

News February 15, 2026

தேனி: கார் மோதி பரிதாப பலி

image

தேனி மாவட்டம், கோகிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் பிப்.13 அன்று அவரது பைக்கில் குச்சனூர் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக பாலாஜி என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சங்கர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!