News March 29, 2025

போடியில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்

image

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான போடி கைலாய கீழ சொக்கநாதர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் அம்மாவாசை பௌர்ணமிகளில் இக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இக்கோயில் 2000 ஆண்டுகள் தொன்மையானது. ஐந்து தலை நாகம் ஒன்று கோயிலை பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.

Similar News

News March 31, 2025

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் 31.03.2025 10 மணி- 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News March 31, 2025

தேனி : ஆயிரம் லிங்கங்கள் ஒரே இடத்தில் சங்கமம்

image

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கீ.மீ தொலைவில் உள்ளது சுருளிமலை கோடி லிங்கேஷ்வர் ஆலயம். இந்தக் கோயிலில் ஆயிரக்காணக்கான லிங்கங்கள் உள்ளது. இந்த லிங்கங்கள் அனைத்தும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும். இங்கு வழிபட்டால் கடன் பிரச்சனை நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனையில் இருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

தேனி :கிணற்றில் மிதந்த பெண் சடலம்

image

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் முனியாண்டி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவரின் உடல் மிதந்தது. அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!