News January 11, 2026
போடியில் பாலியல் தொழில்… அதிர்ச்சி

போடி பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன். இவரது மனைவி ரதியா பானு. இவர்களது நண்பர் குருவுலட்சுமி. இவர்கள் மூவரும் சேர்ந்து போடி பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து போடி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பூபதி அளித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் காஜாமைதீன், ரதியாபானு மற்றும் குருவுலட்சுமி மூவரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
தேனியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம், சிவலிங்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்(31). இவர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல் ஏற்பட்ட நிலையிலும், மனநிலை பாதித்த நிலையிலும் காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம ராம்குமார் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
தேனியில் 1,550 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.23ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீரபாண்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8, 10, 12th, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 16 நிறுவனங்களில் 1,550 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 76959-73923 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT
News January 21, 2026
போடியில் வாலிபருக்கு கத்தி குத்து

போடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). இவரது மனைவி மெளனிகா 2 வருடத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ராதாகிருஷ்ணன் தான் காரணம் என மெளனிகாவின் அண்ணன் மதன்குமார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மதன்குமார் ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.


