News April 9, 2025
போச்சோ வழக்கில் 3 மற்றும் 5 ஆண்டு சிறை

தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த 9 மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மறவன் மடத்தை சேர்ந்த ஜெயராஜ், சூரிய ராஜ் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜோஸ்வா ராஜ் ஆகியோர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஜெயராஜ் மற்றும் சூரிய ராஜ்க்கு, 3 வருடம் சிறை தண்டனையும், ஜோஸ்வா ராஜ்க்கு 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
Similar News
News August 20, 2025
தூத்துக்குடி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
தூத்துக்குடியில் ஒரு ஸ்ரீரங்கம்! உங்களுக்கு தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயில் புராண சிறப்புகளை கொண்டது. நம்மாழ்வார் அவதாரம் செய்த புண்ணிய பூமி ஆகும். நவ திருப்பதிகளில் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்கம் போல இங்கு அரையர் சேவை நடைபெறும். அமாவாசை மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் முன்னோர்களுக்கு திதி அளிக்கப்படும். இதனால் முன்னோர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News August 20, 2025
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் கைது

கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக அவசர அழைப்பு எண் 100-க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சோதனை செய்த போடு இது உறுதியானது. பின்னர் விருதுநகரைச் சார்ந்த கதிரேசன், மதுரையைச் சார்ந்த சூர்யா மற்றும் 3 பெண்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.