News February 5, 2025

போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை தண்டனை

image

மண்டபம் அருகே உள்ள மைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் கடந்த 18.8.22 அன்று 16 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு இராமநாதபுரம்  மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கவிதா பாலச்சந்தருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News

News August 14, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் ரூ.1.75 லட்சம் அபராதத்துடன் விடுதலை

image

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை வவுனியா சிறையில் இருந்த நிலையில், இவர்களது வழக்கு இன்று (14-08-2025) இலங்கை, மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களுக்கும் தலா ரூ.1.75 லட்சம் அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

News August 14, 2025

ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

ராமநாதபுரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், ஆகஸ்ட் 19, 2025 அன்று மாலை 4 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும், விவசாய பெருமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் அறிவித்துள்ளார்.

News August 14, 2025

ராமநாதபுரம் மக்களே இந்த செல்போன் நம்பர் உங்களுக்கு அவசியம்

image

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், நகராட்சி சேவைகள் மற்றும் பணிகள் குறித்த புகார்களை 81483 30065 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து நேரடியாக தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். *இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க அவசியம் உதவும்*

error: Content is protected !!