News January 14, 2025
போக்சோவில் கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரப் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (50), சின்ன சீரகாபாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கடந்த ஜன.10இல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 9, 2025
சேலம்: கனரா வங்கி நிறுவனத்தில் வேலை!

சேலம்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 9, 2025
சேலத்தில் அறிவித்தார் கலெக்டர்!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சுயதொழில் துவங்க இ-சேவை மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் திட்டம் மற்றும் நன்னிலம் மகளிர் நில திட்டம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து இதில் பயன் பெறலாம் என வலியுறுத்தியுள்ளார்.
News September 9, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03680) இன்று (செப்.09) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 மணி நேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.