News April 4, 2025
போக்குவரத்து விதிமீறல் 1,835 வழக்குகள் பதிவு

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மார்ச் மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. மதுபோதையில் வாகனம் இயக்கிய, 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, 932 ஹெல்மட் அணியாதது,29பேர் சீட் பெல்ட் அணியாதது,100 வாகனங்கள் காப்பீடு இல்லாதது என 1,835 வழக்குகள் என ரூ.6.77 லட்சத்திற்கு அபராதம் வசூலித்தனர். மதுபோதையில் வாகனம் ஒட்டிய 29 பேர் உரிமத்தை ரத்து செய்தனர்.
Similar News
News November 5, 2025
ஈரோடு: ரயில்வே வேலை! APPLY NOW

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.25,500-ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News November 5, 2025
தாளவாடி அருகே விபத்து

ஈரோடு, தாளவாடி இருந்து கெட்டவாடிக்கு இன்று காலை 40 மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து தொட்டமுதிகரை அருகே செல்லும் போது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காயம் அடைந்தார். பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதாரம் ஆனாது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 5, 2025
ஈரோடு: மக்களுக்கு முக்கிய எண்கள்

காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர இருக்க வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. ( SHARE)


