News October 13, 2025

போக்குவரத்திற்கு இடையூறு செய்த சகோதரர்கள் கைது

image

கடமலைக்குண்டு போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.11) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பஜார் அருகே சகோதரர்களான சிவ கணேஷ், சிவகுமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து பொதுமக்களை ஆபாசமாக பேசி உள்ளனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் கேட்காத நிலையில் இருவர் மீதும் வழக்கு செய்து அவர்களை கைது செய்தனர்.

Similar News

News November 16, 2025

தேனி: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

image

தேனி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 16, 2025

தேனியில் 15 பேர் சேர்ந்து பெண் மீது தாக்குதல்

image

பெரியகுளம், எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவரது மனைவி மாலையம்மாள். இதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நவீன்குமார் இவரது நண்பர்கள் விஷ்ணு, ஜீவானந்தம் உட்பட 15 பேர் மாலையம்மாள் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் நவீன்குமார் உட்பட 15 பேர் வழக்கு (நவ.15) பதிவு.

News November 16, 2025

தேனி: சிறுவன் ஓட்டிய பைக் மோதி ஒருவர் படுகாயம்

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ரபிக் (48). இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் சின்னமனூர் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 14 வயது சிறுவன் ரபீக் பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார். இந்த விபத்தில் ரபீக் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!