News March 26, 2025
பொருளாதர குற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ பொருளாதாரம் மற்றும் சைபர் குற்றம் அதிகரித்து வருகின்றது என குற்றஞ்சாட்டினார். அதற்கு அமைச்சர் நமசிவாயம் அவர்கள் சிபிசிஐடி போலீசார் தற்போது பொருளாதார குற்றங்களை கண்டறிந்து வருகின்றது. பொருளாதர குற்றம் செய்வார்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2025
வதந்தியை நம்பி திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நடைபெறாது சனிக்கிழமை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் மற்றபடி சனிப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறாது என திருநள்ளாறு கோயில் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று நடப்பதாக வந்த வதந்தியை நம்பி திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் கூடி ஏமாற்றம் அடைந்தனர். இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க SHARE செய்யவும்..
News March 29, 2025
யுகாதி வாழ்த்து தெரிவித்த புதுவை முதலமைச்சர்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களால் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படும் இந்த யுகாதி பண்டிகை, புதிய தொடக்கத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்குவதாக அமையட்டும், எனக் கூறி மேலும் புதுச்சேரி மக்களுக்கு தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு தலைமை பொறியாளர் நியமனம்

புதுச்சேரி பொதுப்பணித்துறை [சிடிசி] சர்க்கிள் – 1 கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் வீரசெல்வத்திற்கு புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருந்த தீனதயாளன் சமீபத்தில் லஞ்ச புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வீரசெல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.