News January 23, 2025

பொருநை புத்தகத் திருவிழா 31-ல் தொடக்கம்

image

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருநை புத்தகத் திருவிழா வரும் 31ஆம் தேதி நெல்லையில் தொடங்குகிறது. நெல்லை மாநகராட்சி வர்த்தக மையம் அரங்கில் புத்தகத் திருவிழா தொடங்கி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்க உள்ளனர். பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Similar News

News October 18, 2025

நெல்லை: கார் கண்ணாடி சண்டையில் ஒருவர் கொலை!

image

ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிமெண்ட் வியாபாரி அருண்செல்வம் (33), தனது அண்ணனுக்கும் இசக்கிமுத்து என்ற போஸ் என்பவருக்கும் இடையே கார் கண்ணாடி உடைப்பு சமந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது . நேற்று நெல்லையில், போஸ் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளை மோதி அருண்செல்வத்தை கீழே தள்ளி, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தடுக்க வந்த நண்பருக்கும் வெட்டு. இதுக்குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை.

News October 18, 2025

நெல்லை: வெள்ளம் பாதிப்புகள் புகார் எண்கள்!

image

நெல்லையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 18, 2025

நெல்லை: சிறையில் இருந்த முன்னாள் காவலர் உயிரிழப்பு!

image

குமரி மாவட்டம், தோவாளை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீசார் ஜோசப் ராஜ் (74), 1999ம் ஆண்டு தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வின்சென்ட் என்பவர் இறந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கபட்டிருந்தார். நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!