News August 23, 2024
பொம்மிடி அருகே இளம்பெண் குழந்தைகளுடன் தற்கொலை

பொம்மிடி அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரது மனைவி ஹரிதேவி (24 ) தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களின் உடலை மீட்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
தருமபுரி: பெண் அதிரடி கைது!

காரிமங்கலம் போலீசார் பாலக்கோடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சட்டவிரோதமாக மது விற்ற அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி (45) என்பவரைப் பிடித்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், சிவகாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நேற்று பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
News January 28, 2026
தருமபுரி: +1 மாணவன் பரிதாப பலி!

ஏரியூர் அருகே குருக்கலையனூரைச் சேர்ந்த +1 மாணவன் சர்மா 16, தனது தாய் செடிகளுக்கு அடித்த களைக்கொல்லி மருந்தை கவனக்குறைவாகத் தொட்டுள்ளார். பின்னர் கையை சரியாகக் கழுவாமல் உணவு உண்டதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் பச்சமுத்து தொப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் முத்து ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


