News August 27, 2024
பொன்னமராவதியில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

பொன்னமராவதி ஜெ.ஜெ நகரில் வசித்து வருபவர் அழகுமணி. இவரது மனைவி நல்லம்மாள். பலகாரக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு பூபதி (13), கார்த்திகேயன் (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் 2 பேரும் நேற்று சண்டையிட்டு கொண்டனர். இந்நிலையில் கடையின் உள்ளே சிறுவன் பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டன்
Similar News
News November 6, 2025
புதுகை: கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(17). வேளாண்கல்லூரி முதலாமாண்டு மாணவரான இவர் சரியாக கல்லூரிக்கு செல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்ததோடு கைப்பேசியையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 6, 2025
புதுகை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
புதுகை: கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள சிறு வலத்தூர்-கருப்பன் கோவில் பூசாரி தங்கவேல் தேவர் (55) கோவில் மைக் போடும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் உள்ள கிராமத்து பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் இது குறித்து ஜெகதாபட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


