News July 9, 2025
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 12.07.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும்

திருப்புவனம்: அஜித்குமார் காவல் மரணம் வழக்குடன் அவர் மீதான திருட்டு வழக்கையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மற்றும் விசாரணை குழுவில் இடம் பெறும் சிபிஐ காவலர்களையும் சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நியமித்து விசாரணையை தொடங்கி ஆக.20-க்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என (ஜூலை-08) இன்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
News July 9, 2025
திருப்புவனம் அஜித்குமார், கஸ்டடி (lockup ) மரண வழக்கில் முகாந்திரம்

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், கஸ்டடி (lockup )-ல் உயிரிழந்த வழக்கில்
நீதிபதி ஜான் சுந்தர்லால் இன்று (ஜூலை-08) சமர்பித்த அறிக்கையின்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
News July 9, 2025
சிவகங்கையில் அஜித்குமாரின் குடும்பத்தாருக்கு எம் பி ஆறுதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் தாயார் மாலதியை, இன்று (ஜூன்-08) சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் சந்தித்து ஆறுதல் கூறினார். சின்னத் திருட்டுக்கு தனிப்படை விசாரிக்க அவசியம் என்ன? யார் தனிப்படையை அனுப்பியது என்பதை சிபிஐ விரைவில் விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்