News April 23, 2025
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23.04.2025) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. A.சுஜாதா, பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News August 11, 2025
ஈரோடு: அரசு சார்பில் இலவச ஆன்மிகப் பயணம்

ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற ஆக.15 ஆம் தேதியன்று பக்தர்கள் ஆன்மிகப் பயணம் செல்வதற்கு ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் சூரம்பட்டிவலசு, பெரியார் நகர், ஜவான் கட்டிடம், இரண்டாவது தளம் என்ற முகவரியில் நேரில் சென்று பெறலாம். ஈரோடு மக்களே அனைவருக்கும் பகிருங்கள் யாருக்காவது பயன்படும்! SHAREIT
News August 11, 2025
ஈரோட்டில் பெண்களுக்கு இலவசம்: முந்துங்கள்!

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஆக.18 முதல் செப்.24 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0424-2400338 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். ஈரோடு மக்களே SHARE பண்ணுங்க!
News August 11, 2025
மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய சரகம் IRTT கல்லூரியில் இன்று(11.08.2025) போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுஜாதா கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.