News February 13, 2025

பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் 

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. வழங்கப்பட்ட 75 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 46 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 29 மனுக்கள் பெறப்பட்டன.

Similar News

News April 21, 2025

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

image

செங்கல்பட்டை சேர்ந்த முருகேசன் திருக்கழுக்குன்றம் கிராம அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த நிலையில் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறை மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2025

மொரப்பூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

மொரப்பூர் அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்(23). இவர் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்று உள்ளார், அப்போது ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார். இதுகுறித்து அரூர் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று ஆற்றில் சடலமாக கிடந்த கிஷோரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2025

தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பில் கோடை கால பயிற்சி முகாம் வருகின்ற 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 15 ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் இந்த பயிற்சி குறித்து விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.

error: Content is protected !!