News April 21, 2025

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட கலெக்டர்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

Similar News

News September 19, 2025

திருப்பூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

திருப்பூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் <>‘ரயில் ஒன்’<<>> எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., தீபாவளிக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News September 19, 2025

திருப்பூர் அருகே ஆற்றில் வந்த பெண் சடலம்!

image

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மடத்துக்குளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News September 19, 2025

உடுமலையில் வேலை தேடுவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது எனவே உடுமலை பகுதியில் வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!