News July 27, 2024

பொதுத்தேர்வு மோசடியில் 9 பேர் கைது – அதிர்ச்சி தகவல்

image

கடந்த ஆண்டு நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் சிவகங்கையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 2 மாணவர்களின் கையெழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மதுரையில் உள்ள ஒரு கல்வித்துறை அலுவலகத்தில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 1 மாணவன், 4 பெற்றோர்கள்,4 அதிகாரிகள் என 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News July 7, 2025

மதுரை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

image

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரைக்கு 155 காலிப் பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்:ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974081>>மேலும் அறிய<<>>

News July 7, 2025

மதுரை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

image

மதுரை மாவட்டத்தில் 155 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்த்தாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அனுகலாம்.

News July 7, 2025

மீனாட்சி அம்மன் கோவில் ஆனி பொன்னூஞ்சல் உற்சவ விழா

image

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சியை சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆணி பொன்னூஞ்சல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பிரியாவிடையுடன் எழுந்தருளி கோவிலில் வலம் வந்து பொன்னூஞ்சல் உற்சவத்தில் ஊஞ்சலாடினர். ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்தினருடன் வருகை புரிந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!