News December 24, 2025
பொங்கல் பரிசு ₹5,000.. அமைச்சர் கொடுத்த அப்டேட்

பொங்கல் பரிசு அறிவிப்பை அரசு தற்போது வரை வெளியிடாமல் இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், CM ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற அப்டேட் கொடுத்துள்ளார்.
Similar News
News December 30, 2025
பொங்கல் பரிசுத்தொகை.. ஸ்வீட்டான செய்தி வந்தது

புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், விரைவில் பொங்கல் பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி & சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தலா 1.77 கோடி வேட்டி & சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
News December 30, 2025
அதிமுக அடிமை கட்சி தான்: அண்ணாமலை

‘அதிமுக அடிமை கட்சி’ என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, ‘என்னை பொறுத்தவரை அதிமுகவும் அடிமை தான், NDA கூட்டணியும் அடிமை தான். யாருக்கு அடிமை? மக்களுக்கு அடிமை’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களை எஜமானர்களாக நினைத்து, அவர்களுக்காக சேவை செய்யும் கூட்டணியை அடிமை என சொன்னால், அதை பெருமையாக நினைத்து வேலை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
‘புதிய கல்விக்கொள்கையை TN மக்கள் ஏற்றுள்ளனர்’

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், புதிய கல்விக் கொள்கையை TN மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், தமிழக அரசு ஏற்காவிட்டாலும், அவர்களுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதாக குறிப்பிட்டார்.


