News January 8, 2026
பொங்கல் பரிசு: திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8,35,844 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 980 குடும்பங்கள் என மொத்தம் 8,36,824 குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (ஜன.8) முதல் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.3,000 பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
திருச்சியில் குவிந்த 663 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 663 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News February 2, 2026
திருச்சி: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

எடமலைப்பட்டி புதூர் ஜே.ஜே நகர் பகுதியைச்சேர்ந்த கோபால் என்பவர் குடும்ப பிரச்சனையில், தனது மனைவியை தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கோபால் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி விஷ்ணு பிரியா உத்தரவிட்டார்.
News February 2, 2026
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


