News December 24, 2025
பொங்கல் பண்டிகை… நாளை மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல, தென் மாவட்டங்களுக்கு மேலும் 40 ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை (அ) நாளை மறுநாள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், கடந்த முறை டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த முறை உஷாரா புக் பண்ணிக்கோங்க நண்பர்களே!
Similar News
News December 31, 2025
TNPSC-க்கு புதிய செயலாளர்.. தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் இருந்த சத்யபிரதா சாகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, பானோத் ம்ருகேந்தர் லால் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
News December 31, 2025
EX வங்கதேச PM இறுதி சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்

நாளை நடைபெற உள்ள EX வங்கதேச PM ஹலிதா ஜியாவின் இறுதி சடங்கில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. <<18716289>>ஹலிதாவின்<<>> 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவிற்கு எதிராக அரசியல் செய்ததும், வங்கதேசத்தின் முன்னணி ஆயுத விற்பனையாளராக சீனா உருவெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
News December 31, 2025
IPL-ல் ₹13 கோடி.. ஆனால் தேசிய அணியில் இடமில்லை!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை SRH அணி ₹13 கோடி என்ற பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், 2026 டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ஹேரி புரூக் கேப்டனாக தலைமை தாங்க உள்ளார். துணை கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை. 2026 பிப்ரவரியில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது.


