News April 24, 2025

பைக் விபத்தில் ஐ.டி. ஊழியர் பலி

image

திருச்சியைச் சேர்ந்த தினேஷ், செங்கண்மால் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சிறுசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 23) நள்ளிரவு வேலை முடிந்து கேளம்பாக்கம் புதிய புறவழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளவந்தாங்கல் ரவுண்டானா அருகே சென்றபோது பைக் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News September 17, 2025

செங்கல்பட்டில் பெரியார் என்ன செய்தார் தெரியுமா?

image

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதல் சுயமரியாதை மாநாடு, 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து ‘ஈ. வெ. இராமசாமிப் பெரியார்’ என சாதி பெயரை சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.

News September 17, 2025

செங்கை: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த<<>> லிங்கில் கிளிக் செய்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர்

News September 17, 2025

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 17ம் தேதி தாம்பரம் வருவாய் கோட்டத்தில் காலை 10:30 மணிக்கு மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையிலும், செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!