News March 26, 2024
பைக் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி

கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (45), அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த 20 ஆம் தேதி இரவு தனது பைக்கில் பெருமாங்குப்பம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்தார். இதில் படுகாயம்டைந்த பிரபுவை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Similar News
News February 15, 2026
வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு!

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்றி வரும் 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி குடியாத்தம் BDO சத்திய மூர்த்தி வட்டார ஊராட்சிக்கும், வேலூர் BDO வின்சென்ட் ரமேஷ் பாபு குடியாத்தத்துக்கும், பேரணாம்பட்டு BDO சதீஷ்குமார் வேலூருக்கும் என மொத்தம் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
News February 15, 2026
வேலூர்: தூக்கி வீசப்பட்ட முதியவர்!

பாகாயம் அருகே நேற்று (பிப்.14) மாலை 70 வயது முதியவர் சாலையை கடக்க முயன்ற்றுள்ளார். அப்போது எதிரே வந்த பஸ் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இவரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் காயம் அடைந்த முதியவர் வைத்திருந்த ரூ.9,375-யை மருத்துவ உதவியாளர் அனிதா உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
News February 15, 2026
வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

கொல்லமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராகவன் (30). இவர் அகரம்சேரியை சேர்ந்த சுவேதாவை (28) காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுவேதாவை கொடுமைப்படுத்தியதால் கூலிப்படையினரால் ராகவன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் சுவேதாவின் தந்தை அமுல்ராஜ், அப்பு ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் கூலிப்படையை சேர்ந்த சவின்குமார் (29), சுஜன் (19), ராமு (47) ஆகியோரை கைது செய்துள்ளனர்.


