News March 20, 2025
பைக்கில் புடவை சிக்கி பெண் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே, ஜெகதீசன் மனைவி அருணாவுடன் மகளை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி வரும்பொழுது, அருணாவின் புடவை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி, வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 20, 2025
தீராத வியாதிகளை தீர்க்கும் வைத்திய வீரராகவர்

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவில் உள்ளது. மூலவரை, வைத்திய வீரராகவர், பிணி தீர்க்கும் வீரராகவர் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு 3 அம்மாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து வழிபட்டால், தீராத வியாதிகள், வயிற்றுவலி, காய்ச்சல் ஆகியவை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிகையாக உள்ளது. தவிர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
News March 20, 2025
அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் திடீர் சோதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் BIS முத்திரை இல்லாத உலோக குடிநீர் பாட்டில்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் என ரூ.36 லட்சம் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
News March 20, 2025
அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். பொருள்களின் சோதிக்கும் மத்திய தர நிர்ணய அதிகாரிகள் இன்று திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில், கொடுவள்ளி பகுதிகளில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.