News August 31, 2025
பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(43). இவா்,நிலத்தரகா் ஆக.28ம் தேதி பணி நிமித்தமாக பைக்கில் செய்யாறு – ஆற்காடு சாலையில் தூளி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென நிலைத் தடுமாறியதில் கீழே விழுந்துள்ளாா். இதில்,அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தாா். செய்யாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.
Similar News
News September 1, 2025
தி.மலை உள்ளாட்சித் துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், ஜவ்வாது மலை, கலசப்பாக்கம், போளூர், புதுப்பாளையம், தெள்ளார், துரிஞ்சாபுரம், தி.மலை, வந்தவாசி, வெண்பாக்கம் மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள இரவு காவலர், பதிவறை எழுத்தாளர், அலுவலக உதவியாளர் ஈப்பு ஓட்டுநர், ஆகிய பணிகளுக்கு (30 -9 -25) குள் விண்ணப்பிக்க விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.
News September 1, 2025
தி.மலை: கார் மோதிய விபக்த்தில் ஒருவர் பலி

கொடநகரைச் சோ்ந்த கன்னியப்பன், சோடா கடை நடத்தி வந்தார், இவா் கடைக்கு செல்வதற்காக (ஆக.31) பைக்கில் செய்யாறு புறவழிச் சாலையை கடந்தாா். அப்போது ஆற்காடு சாலையிலிருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கன்னியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செய்யாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 1, 2025
தி.மலை: ஆற்றில் குளித்த சகோதரர்கள் பலி

தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மல்லப்பா நாயக்கன் பாளையம் கிராமத்தில் எரி இருக்கிறது. இந்த ஏரியில் நேற்று குளிப்பதற்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தனுஷ் (8) ஹரிமோனிஷ் (6) ஆகிய 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.