News April 11, 2024
போடி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை

போடிநாயக்கனூர் ரயில்வே நிலையத்தில் இன்று சென்னையிலிருந்து கரூர், ஈரோடு, மதுரை மார்க்கமாக போடிநாயக்கனூர் வந்த ரயிலில் வந்த பயணிகளிடம் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அனுமதி இன்றி கொண்டுவரப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News July 8, 2025
இதெல்லாம் நம்பாதீங்க – தேனி மாவட்ட காவல்துறை

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு செல்போனில் வரும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வரும் போலி குறுஞ்செய்தி, லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும் இதனால் வங்கி கணக்குகளிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கபடும் எனவும் தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
தேனியில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 9ம் தேதி முதல்15ம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கொண்டாடபட உள்ளது. வேலைதேடும் இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி (04546 254510) எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் வேலை! ரூ.85,000 வரை சம்பளம்

தேனி மக்களே பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். <