News August 7, 2024

பேரையூரில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்

image

நெல்லையில் நேற்று(ஆக.,6) காரில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுடன் சென்ற சங்கரன்கோவிலை சேர்ந்த விஷ்ணு சங்கர்(35), தங்கராஜ்(42), சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சீமைசாமி(56), கோபாலகிருஷ்ணன்(33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், மதுரை பேரையூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து கள்ளநோட்டு அச்சடித்தது தெரியவரவே அங்கு போலீசார் அதிரடி ஆய்வு நடத்தி அச்சடித்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News December 10, 2025

மதுரை – கோவா சுற்றுலா ரயில் அறிவிப்பு

image

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை முதல் கோவா சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து டிசம்பர் 27ம் தேதி புறப்பட்டு திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கோவா செல்கிறது. முன்பதிவு செய்ய விரும்புவார்கள் இணையதளத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு 73058 58585 மற்றும்<> www.tourtimes.in <<>>முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

News December 10, 2025

மதுரை: போட்டித் தேர்வர்களுக்கு இனிப்பான செய்தி.!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News December 10, 2025

JUST IN: திருப்பரங்குன்றம் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

image

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருப்பரங்குன்றம் மலை மற்றும் பெரிய ரத வீதியிலுள்ள தர்காவிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!