News March 29, 2025
பேருந்து மோதி ஊழியர் பலி

ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்தவர் சரவணன்(45). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை சரவணன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த மீனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 3, 2025
வேலூர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு

திருவண்ணாமலை மகா தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க (டிச.2) முதல் (டிச.5) வரை பெங்களூரு, கிருஷ்ணகிரி மற்றும் சித்தூரிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நோக்கிச் செல்லும் கனரக, இலகு ரகவாகனங்கள் அனைத்தும் வேலூர், கண்ணமங்கலம், திருவண்ணாமலை வழியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாறாக அனைத்து வாகனங்களும் வேலூர் ஆற்காடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 3, 2025
வேலூர்: மின்வேலியால் தந்தை, மகன்கள் பலியான பரிதாபம்!

வேலூர்: ஒடுகத்தூர், ராமாநாயணிகுப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (டிச.1) வயலுக்கு வைத்திருந்த வேலியால் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் ஜானகிராமன் (55), விக்காஸ் (25), ஜீவா (22) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் வயலுக்கு மின்வேலி அமைத்த அதே பகுதியை சேர்ந்த சங்கரை (52) இன்று கைது செய்தனர்.
News December 3, 2025
வேலூர்: இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (டிச.02) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


